search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
    X

    பாதுகாப்புப் பணியில் போலீசார்

    ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

    • ஜம்மு காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள், காஷ்மீர் பண்டிட்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
    • குல்காம் மாவட்டத்தில் மே 30-ம் தேதி பள்ளி ஆசிரியை ரஜினி பாலாவை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் அப்பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    விசாரணையில், கடந்த மாதம் 30-ம் தேதி பள்ளி ஆசிரியை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் தொடர்பு உடையவர்கள் என தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×