தமிழ் எழுத்துக்களால் அசத்தல் உருவப்படம் - தமிழரை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா

மொத்தம் 741 பண்டைய தமிழ் எழுத்துக்களால் உருவான அசத்தலான உருவப்படம். தமிழரை பாராட்டி ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட ட்விட் வைரலாகி வருகிறது.
ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா
Published on

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நபர் வரைந்த ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கனேஷ் என்ற நபர் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் உருவ படத்தை மிக வித்தியாசமாக வரைந்து அசத்தி இருக்கிறார். 

ஓவியத்தில் கணேஷ் பண்டைய தமிழ் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார். இதனை உற்று பார்க்கும் போது உருவப்படத்தில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே தெரியும். ஓவியத்தில் ஆனந்த் மஹிந்திரா உருவப்படத்தை வரைய கணேஷ் மொத்தம் 741 பண்டை கால தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி இருக்கிறார்.

கணேஷ் இந்த உருவப்படத்தை வரைந்த போது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு அதில் ஆனந்த் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழும நிறுவனங்களையும் டேக் செய்து இருக்கிறார். இதை கவனித்த ஆனந்த் மஹிந்திரா கணேஷ் ட்விட்-ஐ ரி-ஷேர் செய்தார். மேலும் இந்த வரைபடத்தின் பிரேம் செய்யப்பட்ட நகலை தனக்கு வழங்குமாறு ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வரைபடத்தை தனது அறையில் வைத்து அலங்கரிக்க விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பதிவில், “ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது, நான் வியக்கிறேன். தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக, உருவ படத்தை என் வீட்டில் வைக்க  விருப்பபடுகிறேன்..” என குறிப்பிட்டு இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com