அந்த தகவலை நம்பாதீங்க.. அது விபத்து தான்.. ஜம்மு காவல் துறை அறிவிப்பு

மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி இந்த விபத்து திட்டமிட்ட ஒன்று என தெரவித்து இருந்தது. போலி தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த தகவலை நம்பாதீங்க.. அது விபத்து தான்.. ஜம்மு காவல் துறை அறிவிப்பு
Published on

ஜம்முவின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த சாலை விபத்தின் பின்னணியில் பயங்கரவாத அமைப்பு இருப்பதாக செய்தி வெளியாகி வந்தது. இந்த தகவலில் துளியும் உண்மையில்லை என்று ஜம்மு காஷ்மீர் காவல் நிலையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

காவல் துறை மூத்த துணை ஆய்வாளர் கலில் போஸ்வால் ஏழு பேரை பலிகொண்ட சம்பவம் சாலை விபத்து தான். ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்து ஏற்பட காரணம் என்று தெரிவித்தார். மிகவும் கடினமான வளைவில் செல்லும் போது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் மலையில் இருந்து கீழே விழுந்தது.

மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி சார்பில், இந்த விபத்து திட்டமிட்ட ஒன்று என தனது சமூக வலைதளத்தில் தெரவித்து இருந்தது.

"தங்துருவில் ஏற்பட்ட சாலை விபத்தின் பின்னணியில் சட்டவிரோத பயங்கரவாத கும்பல் இருப்பதாக வெளியான செய்தி போலியானது ஆகும். அதில் எவ்வித உண்மையும் இருப்பதாக தெரியவில்லை. மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி வெளியிட்டு இருக்கும் அறிக்கையை மறுக்கிறோம். மக்கள் இதுபோன்று வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம்," என்று போஸ்வால் தெரிவித்தார்.

இதுபோன்ற போலி தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com