ஜார்ஜியாவில் எலெக்ட்ரிக் வாகன ஆலையை திறக்கும் ஹூண்டாய்

ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய அதிரடி திட்டங்களை தீட்டி வருகிறது. இதன் அங்கமாக புதிய EV ஆலையை திறக்க முடிவு செய்துள்ளது.
ஹூண்டாய் எலெக்ட்ரிக் வாகனம்
ஹூண்டாய் எலெக்ட்ரிக் வாகனம்
Published on

ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் டெஸ்லாவுக்கு அச்சுறுத்தலான பிராண்டாக பார்க்கப்படுகிறது. ஐயோனிக் 5 மாடல் ஆண்டின் சிறந்த கார் என்ற பெருமையை பெற்றதோடு, ஹூண்டாய் பிராண்டின் EV6 மற்றும் ஜெனிசிஸ் GV60 போன்ற மாடல்கள் மூலம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் குறிப்பிடத்தக்க பங்குகளை பிடிக்க திட்டமிட்டுள்ளது. 

இதோடு ஹூண்டாய் நிறுவனத்தின் கியா பிராண்டு இந்திய சந்தையில் தனது EV6 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. இந்த வரிசையில், ஹூண்டாய் நிருவனம் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை திறக்க முடிவு செய்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகன சந்தையில் கவனம் செலுத்த ஹூண்டாய் நிறுவனம் 7.4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து புதிய ஆலையை துவங்க இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. 

தற்போது இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஹூண்டாய் செய்தி தொடர்பாளர், “அமெரிக்காவில் புதிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை துவங்க இருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதுதவிர இப்போதைக்கு தெரிவிக்க வேறு எந்த தகவல்களும் இல்லை,” என தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com