அறிய முடியாத மர்மம்

தெரிந்து கொள்ளுபவர் தெரிந்து கொள்ள வேண்டியதிலிருந்து தனித்து விலகி இருக்க வேண்டும். அப்போதுதான் தெரிந்து கொள்வது சாத்தியமாகிறது.
ஓஷோ
ஓஷோ
Published on

இந்த உலகத்தில் மூன்று விஷயங்கள் உள்ளன.

மூன்றாவது தெரிந்து கொள்ள முடியாதவைகள்...

தெரிந்தவை என்பது மனித மனம் அறிந்து கொண்டவை.

தெரியாதவைகள் விரைவில் தெரிந்தவைகளாக ஆகி விடும்.

ஆனால் இந்த இருப்புலகின் அடித்தளம் தெரிந்து கொள்ள முடியாத விஷயமாக உள்ளது.

மனிதன் இந்த இருப்புலகின் ஒரு பகுதி.

ஒரு பகுதி எப்படி அதன் முழுமையை அறிந்து கொள்ள முடியும்?

இருப்புலகின் ஒரு சிறிய படைப்பாக மனிதன் இருக்கிறான்.

இருப்புலகின் துடிப்பாக ஒரு அலையாக அவன் இருக்கிறான்.

எப்படி இந்த துடிப்பு முழுமையை தெரிந்து கொள்ள முடியும்?

நீங்கள் இந்த முழுமைக்கு, பிரபஞ்சத்திற்கு எல்லையை கணிக்க முடியாது.

பிரபஞ்சம் இங்குதான் முடிகிறது என்று எவரும் சொல்ல முடியாது.

இந்த மர்மம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

தெரிந்து கொள்ளுபவர் தெரிந்து கொள்ள வேண்டியதிலிருந்து தனித்து விலகி இருக்க வேண்டும். அப்போதுதான் தெரிந்து கொள்வது சாத்தியமாகிறது.

ஆனால் தெரிந்து கொள்பவர் தனி ஆளாக இல்லை.  இந்த இருத்தல் அவருள் பாய்ந்து நிரப்புகிறது.

ஐன்ஸ்டின் கூறுகிறார்.. இந்த இருத்தலை முழுமையாக தெரிந்து கொள்வது இயலாத காரியம் என்பதை நான் உணர்கிறேன்.. ஆகவே இந்த இருத்தல் ஒரே மர்மமாக உள்ளது.

-ஓஷோ

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com