பாலைவனத்தில் விளையும் அரிசி

செப்டெம்பர் மாதத்தில் ஷார்ஜாவின் அல் தாகித் பாலைவனத்தில் அசீமி அரிசி நாற்றுகள் நடப்பட்டன.அறிவியலால் அதையும் மாற்ற முடியும் என்பதும் நிருபணம் ஆகியுள்ளது.
பாலைவனத்தில் விளையும் அரிசி
Published on

அரிசி, கோதுமை எல்லாம் எங்கே விளையும்?

தஞ்சாவூர் மாதிரி நஞ்சை நிலத்தில் நு சொல்ல வேண்டாம்.. ஏன் என்றால் பாலைவனத்திலேயே அரிசி விளைகிறது

எந்த பாலைவனத்தில்?

ஷார்ஜா பாலைவனத்தில் தான்..

ஷார்ஜாவிலா? அரிசியான்னு அதிர்ச்சி அடையவேண்டாம்.

தென்கொரியா நாட்டுடன் இணைந்து பாலைவனத்தில் அரிசி விளைவிக்க முடியுமா என ஆராய்ச்சி செய்தார்கள்.

அசீமி எனும் வகை அரிசி தான் இருப்பதிலேயே வெயிலை தாங்கும் தன்மை கொண்டதாக கண்டறியபட்டது.

வெயில் தணிந்த செப்டெம்பர் மாதத்தில் ஷார்ஜாவின் அல் தாகித் பாலைவனத்தில் அசீமி அரிசி நாற்றுகள் நடப்பட்டன.

கடல்நீர் குடிநீராக்காப்பட்டு சொட்டுநீர் பாசனம் உதவியுடன் நீர்ப்பாசனம் நடைபெற்றது.

எந்த பூச்சிக்கொல்லியும், உரமும் அவசியம் இன்றி மே மாதம் அறுவடை நடைபெற்று கால் ஏக்கர் நிலபப்ரப்பில் 763 கிலோ அரிசி வெற்றிகரகமாக அறுவடை செய்யப்பட்டது.

இனி சில ஆண்டுகளில் கோதுமை, காப்பி எல்லாம் விளைவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

ஆக அறிவியலால் அதையும் மாற்ற முடியும் என்பதும் நிருபணம் ஆகியுள்ளது.

- நியாண்டர் செல்வன்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com