திருவாசகத்தின் மகிமை...

லண்டன் தேவாலய நியாய சபையில் போப் மீது குற்றம் சாட்டப்பட்டது.தங்கள் மதத்தைப் பரப்ப இந்தியா சென்ற போப் அங்கிருந்த சைவ மதக் கருத்துகளை இங்கே வந்து பரப்பிக் கொண்டிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.
திருவாசகத்தின் மகிமை...
Published on

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிருஸ்தவ மதத்தைப் பரப்ப இந்தியாவிற்குள் நுழைந்தவர் தான் ஜி.யூ.போப். இவருக்கு தமிழர்கள் அதிகம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள். 600 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த தமிழ் மொழியை உலகறியச் செய்த பெருமகன் அவர் தான். பைபிள் உட்பட பல தத்துவ நூல்களோடு தமிழகம் வந்த போப் மதப் பரப்புரையில் ஈடுபட்டார். தமிழ் மொழியையும் இலக்கணங்களையும் கற்றுத் தெளிந்தார்.

தமிழ் கற்றபின் முழுதாக அவர் படித்த முதல் புத்தகம் திருக்குறள். "இந்த புத்தகத்தில் அறம் பொருள் இன்பம் மட்டுமே உள்ளது. சொர்க்கத்திற்குரிய வீடுபேறு குறித்து எந்த தகவலும் இல்லையே'' எனச் சொன்னார். அப்போது ஒரு புலவர் மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் புத்தகத்தை அவரிடம் கொடுத்தார்.

போப் அவர்களை திருவாசகம் உலுக்கிவிட்டது. லண்டன் திரும்பிய போப் தன் தலைமை கார்டினலிடம் "நம் மேற்கத்திய தத்துவப் புத்தகங்களை ஒரு தட்டிலும் திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வரியை மற்றொரு தட்டிலும் வைத்தால் அது சரியாக இருக்கும்'' என்றார்.

கார்டினல் "அப்படியா.. அந்த வரியைச் சொல்லுங்கள் கேட்கிறேன்'' என்றார். "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க'' என்ற வரியை போப் குறிப்பிட்டார். கார்டினல் வியந்து போற்றிவிட்டு மொத்த திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் சொன்னார். 1900 வது வருடம் மொழிபெயர்ப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

லண்டன் தேவாலய நியாய சபையில் போப் மீது குற்றம் சாட்டப்பட்டது. தங்கள் மதத்தைப் பரப்ப இந்தியா சென்ற போப் அங்கிருந்த சைவ மதக் கருத்துகளை இங்கே வந்து பரப்பிக் கொண்டிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு.

நீதிபதி [கிருஸ்தவ மதத் தலைவர்] முன்பு போப் நிறுத்தப்பட்டார். விசாரித்த நீதிபதி "அவர் மொழிபெயர்த்த புத்தகத்தைப் படித்துவிட்டு தீர்ப்பு சொல்கிறேன்'' என போப்பிடம் ஒரு பிரிதியைப் பெற்றுக் கொண்டு சென்றார்.

ஒருவாரம் ஒரு வரி விடாமல் படித்த நீதிபதி தேவாலயம் வந்தார். அங்கே போப் நின்றிருந்தார். தொப்பென நீதிபதி, போப்பின் கால்களில் விழுந்துவிட்டார். பின்பு தன் இருக்கையில் அமர்ந்த நீதிபதி "போப் அவர்கள் தான் உண்மையான கிருஸ்தவர்.. அவர் இந்த மதத்திற்கு எதிராக எந்த தவறும் செய்யவில்லை. மிக அருமையான புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பை படித்தாலே பிரம்மிப்பாக இருக்கிறதே.. அதன் மூலமாக தமிழ் மொழியிலே திருவாசகத்தைப் படித்த போப் ஒரு பாக்யவான்.. அவரை இந்த குற்றத்திலிருந்து விடுவிக்கிறேன்'' என்றார்.

-சதீஸ் காரட் தமிழன்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com