ஐபிஎல் தொடர்.. குஜராத் அணிக்காக விளையாடவுள்ள சுரேஷ் ரெய்னா?

கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய்க்கு பதில் சுரேஷ் ரெய்னா குஜராத் அணியில் களமிறங்கவுள்ளதாக செய்தி பரவுகிறது.
சுரேஷ் ரெய்னா விளையாடப்போவதாக வைரலாகும் பதிவு
சுரேஷ் ரெய்னா விளையாடப்போவதாக வைரலாகும் பதிவு
Published on

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது.

இந்த ஐபிஎல் தொடருக்காக நடத்தப்பட்ட மெகா ஏலத்தில் மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்பட்ட சி.எஸ்.கே அணி வீரர் ரெய்னா தேர்ந்தெடுக்கப்படவில்லை.

சி.எஸ்.கே அணி உட்பட எந்த அணியும் ரெய்னாவை வாங்க முன்வரவில்லை. இதற்கு காரணம் அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாதது தான் என கூறப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக சுரேஷ் ரெய்னா குஜராத் டைடன்ஸ் அணிக்கு விளையாடவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகின்றன.

குஜராத் அணிக்காக விளையாட இருந்த ஜேசன் ராய் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடப்போவதில்லை என அறிவித்தார். இந்நிலையில் அவருக்கு பதில் ரெய்னா குஜராத் அணியில் இடம்பெறவுள்ளதாக ஐபிஎல் கணக்கு போலவே உள்ள போலி ட்விட்டர் கணக்கு மூலம் ட்ரெண்ட் செய்யப்பட்டது. 

இதுகுறித்து ஆராய்ந்ததில் இந்த செய்தி உண்மை இல்லை என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சுரேஷ் ரெய்னா எந்த அணியிலும் இடம்பெறப்போவதில்லை என தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com