கோயில் பிரசாதத்தை கொடுத்து நகையை திருடும் கும்பல்?- வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

மோசடி நடைபெறுவதாக பரவி வரும் இந்த வீடியோ சிசிடிவி கேமராவில் படம்பிடித்திருப்பது போலவே காட்டப்படுகிறது.
பரவும் செய்தி
பரவும் செய்தி
Published on

வட இந்தியாவில் பேருந்து நிலையம் ஒன்றில் பெண்மணி ஒருவர் அமர்ந்திருக்கும் பயணிகளிடம் சென்று கோயில் பிரசாதத்தை வழங்கிகிறார். அதை ஒரு பெண் சாப்பிட்டுவிட்டு மயங்கி விழுகிறார். அந்த பெண்ணிடம் இருந்து சிலர் நகைகளை திருடி செல்கின்றனர்.

இந்த காட்சிகளை கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சிசிடிவி கேமராவில் படம்பிடித்திருப்பது போலவே காட்டப்படுகிறது. இந்த சிசிடிவி தோற்றம் இந்த வீடியோவிற்கு ஒரு உண்மை தன்மையை வழங்குகிறது.

இந்த வீடியோவை பகிரும் பலர், இதுபோன்ற பிரசாதங்களை கொடுத்து கும்பல் பணத்தை கொள்ளையடிப்பதாக தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இந்த காட்சி அணைத்தும் உண்மையில்லை. ஏற்கனவே திட்டமிட்டு எடுக்கப்பட்டது என தற்போது தெரியவந்துள்ளது.

இதன்படி 3rd Eye என்ற யூடியூப் சேனல் இந்த வீடியோவை அப்லோட் செய்துள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்த்ததற்கு நன்றி, இந்த சேனலில் எழுதி இயக்கப்பட்ட வீடியோக்கள் இருக்கின்றன. சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இது பொழுதுபோக்குக்காக மட்டுமே எடுக்கப்படுகிறது என வீடியோவில் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com