search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரொம்ப யோசிக்காதீங்க.. இதனால தான் கே.எல். ராகுல் கேப்டன்சி செய்யல - நிக்கோலஸ் பூரன்
    X

    ரொம்ப யோசிக்காதீங்க.. இதனால தான் கே.எல். ராகுல் கேப்டன்சி செய்யல - நிக்கோலஸ் பூரன்

    • நிக்கோலஸ் பூரன் லக்னோ அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.
    • பெயர் மூன்றாவது வீரராக குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் கே.எல். ராகுல் கேப்டன்சி செய்யாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருக்கு பதிலாக இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரன் லக்னோ அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.

    இந்த போட்டியில் விளையாடும் கே.எல். ராகுல் இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். அணி வீரர்கள் படிவத்தில் இவரது பெயர் மூன்றாவது வீரராக குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போட்டியில் கே.எல். ராகுல் ஏன் கேப்டனாக செயல்படவில்லை என்ற காரணத்தை நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "கே.எல். ராகுல் காயமுற்று அணிக்கு திரும்பியுள்ளார். நீண்ட தொடர் என்பதால் நாங்கள் அவருக்கு சற்று ஓய்வை அளிக்க விரும்புகிறோம். ஆனால் இன்றைய போட்டியில் அவர் இம்பேக்ட் வீரராக களமிறங்குவார். அனைவரும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×