நியாயத்துக்காக போராடுகிறேன் - விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் ரிலீஸ் பிரச்சனையில் நான் நியாயத்துக்காக போராடுகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார். #VishnuVishal #SilukkuvarpattiSingam
நியாயத்துக்காக போராடுகிறேன் - விஷ்ணு விஷால்
Published on

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வரும் 21 -ம் தேதி வெளியாக இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தின் பட வெளியீட்டு கமிட்டியை மதிக்காமல் இன்னும் சில பெரிய படங்கள் வருவதால் விஷ்ணு விஷால் பாதிக்கப்பட்டார்.

இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு சர்ச்சையானது. என்ன பிரச்சினை என்று கேட்டோம். ‘திடீர் என்று கடைசி நேரத்தில் சங்கம் பின்வாங்கி விட்டது. இது எனக்கு 2வது முறை. ராட்சசன் பட வெளியீட்டின் போதே இதுபோல் நடந்தது. ஒழுங்கு கமிட்டியை சிலர் மதிப்பதில்லை. இதனால் மதித்து நடப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

பழைய முறையே பரவாயில்லை என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். இந்த முறை எங்களுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. பலவீனமானவன் வெளியே போய்விடுவான் என்று நினைக்கிறார்கள். அது தவறு. சங்கம் என்பதே சின்ன, நடுத்தர பட்ஜெட் படங்களை காப்பாற்றத் தான் உருவாக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. நான் எனக்காக மட்டும் பேசவில்லை. பாதிக்கப்படும் சின்ன படங்களுக்காகவும் தான் பேசுகிறேன். நான் நியாயத்துக்காக தான் போராடுகிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com