தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி - விக்ராந்த்

பக்ரீத் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் நிலையில், தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி என்று விக்ராந்த் கூறியிருக்கிறார்.
பக்ரீத் படத்தில் விக்ராந்த்
பக்ரீத் படத்தில் விக்ராந்த்
Published on

நடிகர் விக்ராந்த் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் இவருக்கு ஜோடியாக வசுந்தரா நடித்திருந்தார். மேலும் பேபி ஸ்ருதிகா, ரோகித் பதாக், மோக்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். முருகராஜ் தயாரித்திருந்த இப்படத்தை ஜெகதீசன் சுபு இயக்கியுள்ளார்.

மனிதர்களுக்கும், விலங்குகளும் இடையே இருக்கும் பாசத்தை உணர்த்தும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஒட்டகத்தை மையமாக வைத்து வெளியான முதல் படம் இது. 

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக படத்தை பார்த்த அனைவரும் விக்ராந்தை நடிப்பை பற்றி பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விக்ராந்த், ‘பக்ரீத் படத்திற்கு பத்திரிகையாளர்கள், மக்கள் என அனைவரும் என்னையும் மற்றும் படக்குழுவினரையும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அனைவருக்கும் நன்றி. மேலும் மேலும் முயற்சி செய்வதற்கும், முன்னாடி செல்வதற்கான தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்தத்துக்கு நன்றி’ என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com