உப்பு புளி காரம்

குருராஜா இயக்கத்தில் விக்ரமாதித்யனிடம் வேதாளம் சொல்லும் கதையாக உருவாகியிருக்கும் ‘உப்பு புளி காரம்’ படத்தின் முன்னோட்டம்.
உப்பு புளி காரம்
Published on

‘ஏழாம் அறிவு’, ‘டிஷ்யும்’ போன்ற படங்களில் நடித்த கின்னஸ் பக்ரு இதில் வேதாளமாக நடித்திருக்கிறார். பிரபல மலையாள நடிகர் டினிடாம் இதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக வங்காள நடிகை பவுலமி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாபுராஜ், முகேஷ், டெல்லி கணேஷ், ஜெயந்த், கவ்ஷிகா, பொன்னம்மா பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இசை - வேதம்புதிது ரபி தேவேந்திரன், ஒளிப்பதிவு - ரமே‌ஷன், எடிட்டிங் - எல். கேசவன், நடனம் - பாலகுமார் ரேவதி, கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் - குருராஜா. இவர் படம் பற்றி கூறும் போது...

“தற்காலத்தில் வேதாளமும், விக்கிரமாதித்யனும் சந்தித்துக் கொண்டால் எப்படி இருக்கும்? எப்படிப்பட்ட கதையை சொல்லி வேதாளம் கேள்வி கேட்கும்? அதற்கு விக்கிரமாதித்யனின் பதில்கள் என்னவாக இருக்கும்? என்ற கற்பனையில் உருவானதே ‘உப்பு புளி காரம்’.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com