உள்குத்து

கார்த்திக்ராஜு இயக்கத்தில் தினேஷ் - நந்திதா நடிப்பில் வட்டிக்கு கடன் வாங்கி தவிக்கும் மீனவர்கள் கதையாக உருவாகியிருக்கும் ‘உள்குத்து’ படத்தின் முன்னோட்டம்.
உள்குத்து
Published on

கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வகுமார் தயாரித்துள்ள 3-வது படம் ‘உள்குத்து’.

இதில் தினேஷ் நாயகனாகவும், நந்திதா நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பால சரவணன், ஸ்ரீமன், ‌ஷரத் லோகிதாஸ்வா, திலீப் சுப்பராயன், ஜான் விஜய், சாயாசிங் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இசை - ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - பி.கே.வர்மா, படத்தொகுப்பு - கே.எஸ்.பிரவீன், ஸ்டண்ட் - திலீப் சுப்பராயன், கலை - விதேஷ், தயாரிப்பு - ஜெ.செல்வகுமார், எழுத்து, இயக்கம் - கார்த்திக்ராஜு.

மீன் சந்தையில் சிறுவர்கள் மீனை கிலோவுக்கு 20 ரூபாய் என வெட்டி சுத்தம் செய்து கொடுப்பார்கள். அவர்களுக்கு புதன், சனி, ஞாயிறு மட்டுமே வேலை இருக்கும். மற்ற நாட்களில் அவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். அப்போது தோன்றியது தான் இந்த கதை.

மீனவர்களுக்கு மீன் வாங்க கையில் காசு இருக்காது. அவர்களுக்கு காலையில் ரூ.1 லட்சம் கடன் கொடுப்பவர்கள் அதில் ரூ.10 ஆயிரம் எடுத்துவிட்டு மீதி 90 ஆயிரத்தை மட்டுமே தருவார்கள். மாலையில் ஒரு லட்சம் ரூபாயாக மீனவர்கள் திருப்பி கொடுக்கவேண்டும்.

அந்த பணத்தை அடியாள் வைத்து வசூல் செய்வார்கள். கந்து வட்டி கும்பல் தலைவனிடம் வேலை செய்யும் நண்பர்கள் 5 பேர். அதில் ஒருவனை தலைவன் கொலை செய்தால், மற்ற 4 பேரும் அதை எப்படி கையாளுவார்கள் என்பது கதை. உள்குத்து என்றால், உள்ளே ஒன்றை வைத்து வெளியே ஒன்றை செய்வது.

‘உள்குத்து’ அனைவரும் ரசிக்கும் படமாக தயாராகி உள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com