

இந்த நிலையில் தாடி பாலாஜி குடித்துவிட்டு வந்து தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் ஏற்கனவே அவருக்கு திருமணமாகிவிட்டதை என்னிடம் இருந்து மறைத்து விட்டார் எனவும் 2 மாதங்களுக்கு முன்பு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரது மனைவி நித்யா புகார் அளித்து இருந்தார்.
அதன்மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் அண்ணாநகரில் உள்ள போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது.