சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சஞ்சிதா ஷெட்டி நடித்து வரும் படக்குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சஞ்சிதா ஷெட்டி
சஞ்சிதா ஷெட்டி
Published on

இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கோணப்பட்டி கிராமத்தில் நடந்து வருகிறது. இதில் கிராமத்து மக்களும் கலந்து கொள்ள 100க்கும் மேற்பட்டவர்களை கொண்டு படப்பிடிப்பு நடந்தது. மேலும் கிராம மக்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க கூடியிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொரோனா தடுப்பு குழுவினர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றனர்.

குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாததால் படப்பிடிப்பு குழுவினருக்கு தடுப்பு பிரிவினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்தவும் அனுமதிக்கவில்லை. இதனால் படப்பிடிப்பை பாதியிலேயே ரத்து செய்து விட்டு படப்பிடிப்பு குழுவினர் கிளம்பிச் சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com