பொய் பெயர்களைச் சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறாங்க - ராதாரவி

பட விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் ராதாரவி, இப்பதான் பொய் பெயர்களைச் சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறாங்க என்று கூறியிருக்கிறார்.
ராதாரவி
ராதாரவி
Published on

திரைப்பட விமர்சகர் மாறன் இயக்கியிருக்கும் படம் ஆன்டி இண்டியன். இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ராதா ரவி பேசும்போது, இந்தப்படத்தில் நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா என்று முதலில் யோசித்தேன். படத்தில் சிஎம்-ஆ நடித்திருக்கிறேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே எழுதப்பட்ட கதை இது. அப்ப யாரு சிஎம்ஆ இருந்தாங்கன்னு உங்களுக்குத் தெரியும்.. 

படம் பார்க்கும்போது யாரை பிரதிபலிச்சிருக்கேன்னு தெரியும்.. ஆனால் இந்த நேரத்தில் இந்தப்படம் வெளியாகும் போது யார் என்ன விதமா நினைச்சுக்குவாங்கன்னு தெரியவில்லை. இந்தப்படம் வெளியானதும் இதற்கு விவாத மேடை நடத்துகிறதுக்குத் தயாரா ஒரு கூட்டம் இருக்கும்.. 

இந்தக்காலத்தில் கான்ட்ரவர்ஸியா படம் எடுத்தா நிச்சயமா ஓடும். இப்ப தான் பொய் பெயர்களைச் சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறாங்கள்ல,, அதெல்லாம் நல்லாத்தானே ஓடுது என்று பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com