பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்லப்போறோம், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்.
நெடுமுடி வேணு
நெடுமுடி வேணு
Published on

1978ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் பல்வேறு நாடகங்களிலும் நடித்துள்ளார். மூன்று முறை தேசிய விருது வென்ற இவர், கேரள மாநில விருது, பிலிம் பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

73 வயதாகும் நெடுமுடி வேணு, கொரோனா தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று பின் குணமாகினார். இந்த நிலையில் நேற்று உடல்நலம் சரியில்லாததால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார்.

X

Maalai Malar
www.maalaimalar.com