

கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலிருக்கும் மதுமிதா, பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டார். இந்நிலையில், நடிகை மதுமிதாவிற்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியது.
இதையடுத்து நடிகை மதுமிதா கலைமாமணி விருது பெற்றதை கவரவிக்கும் வகையில் நடிகர் அபிசரவணன் மற்றும் கும்பாரி படக்குழுவினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.