நடராஜனின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க இயக்குனர்கள் ஆர்வம்... ஆனால் அவர் என்ன சொன்னார் தெரியுமா?

கிரிக்கெட் வீரர் நடராஜன் சமீபத்திய பேட்டியில், தனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க இயக்குனர்கள் சிலர் வீடு தேடி வந்ததாக கூறி உள்ளார்.
நடராஜன்
நடராஜன்
Published on

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி.நடராஜன், சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியினருடன் வலைப்பயிற்சி பவுலராக சென்றார். பின்னர் அந்த தொடரில் ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டதுடன், பந்து வீச்சில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

ஆஸ்திரேலிய தொடருக்கு பின் தமிழகம் திரும்பிய நடராஜன், சில தினங்களுக்கு முன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்துக் கொண்டார். இந்நிலையில், நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: “எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க இயக்குனர்கள் சிலர் என் வீடு தேடி வந்தனர். ஆனால் இப்போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை. கிரிக்கெட்டில் முழு கவனத்தையும் செலுத்த விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com