வீட்டில் சிக்கிய போதை மாத்திரைகள் - பிரபல இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால் கைதாவாரா?

பிரபல இந்தி நடிகர் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் சில போதை மாத்திரைகளை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
அர்ஜுன் ராம்பால்
அர்ஜுன் ராம்பால்
Published on

இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு இந்தி திரையுலகில் போதை பொருள் நடமாட்டம் உள்ளது என்றும், சினிமா விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துகின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. போதை பொருள் பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கி பலரை கைது செய்தனர். 

இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரில்லாவின் தம்பி அஜிசிலோஸையும் போலீசார் கைது செய்து அந்தேரி, பாந்திரா பகுதிகளில் அர்ஜுன் ராம்பாலுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் சில போதை மாத்திரைகளை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அர்ஜுன் ராம்பாலுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். 

இதையேற்று போதை பொருள் போலீஸ் முன்பு ஆஜராகி அர்ஜுன் ராம்பால் விளக்கம் அளித்தார். அப்போது தனக்கு மனநல சிகிச்சைக்காக மாத்திரைகளை மன நல மருத்துவர் கொடுத்ததாக தெரிவித்தார். மருந்து சீட்டுகளையும் சமர்ப்பித்தார். மருந்து சீட்டுகள் போலியானவை என்று தெரியவந்தால் அர்ஜுன் ராம்பால் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com