மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் எல்லோரையும் வச்சி செய்வேன் - சுரேஷ் சக்ரவர்த்தி

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் எல்லோரையும் வச்சி செய்வேன் என்று சுரேஷ் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சக்ரவர்த்தி
சுரேஷ் சக்ரவர்த்தி
Published on

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் சவாலான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி. இவர் கடந்தவாரம் வெளியேற்றப்பட்டது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் வெளியேற்றப்பட்டதன் பின்னனியில் சூழ்ச்சி நடந்திருக்கலாம் என்றும் ஒரு சிலர் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் அவர் தனது யூடியூப் சேனல் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கடந்த சீசனில் வனிதா சென்றது போல், நீங்கள் வைல்ட்கார்டு போட்டியாளராக கூப்பிட்டால் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வீர்களா என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி கூறியதாவது: “கண்டிப்பாக செல்வேன். நீங்கள் என்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் எல்லோரையும் வச்சி செய்வேன் என்று கூறியுள்ளார். மேலும் இனி தினசரி பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com