அர்ச்சனா வீட்டில் விசேஷம்... ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்

தொகுப்பாளினியும் பிக்பாஸ் பிரபலமும்மான அர்ச்சனாவின் தன்னுடைய வீட்டில் நடந்த விசேஷத்திற்காக பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்று கூடி இருக்கிறார்கள்.
அர்ச்சனா
அர்ச்சனா
Published on

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டுக்குள் அன்புதான் ஜெயிக்கும் என்று தொடர்ச்சியாக கூறி வந்த அர்ச்சனா, தன்னுடைய தலைமையில் ஒரு குரூப்பை உருவாக்கி வைத்திருந்தார்.

ரியோ, நிஷா, ஜித்தன் ரமேஷ், கேபி, சோம் ஆகியோர் அதில் இடம்பெற்று இருந்தனர். அந்த குரூப்பிற்கு அன்பு கேங் என்றும் அழைத்து வந்தனர். இதைப்பார்த்த இதர போட்டியாளர்கள் அர்ச்சனா குரூப்பிஸம் செய்து வருவதாக குற்றம் சாட்டினர். நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அர்ச்சனா தான் தானாகவே இருந்ததாக விளக்கமளித்தார்.

இந்நிலையில் அர்ச்சனாவின் தங்கை அனிதாவுக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இதில் ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா, கேபி, நிஷா, சோம், அனிதா சம்பத் உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com