ஜீவா படம் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

பிரபல நடிகை ஒருவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜீவா நடிக்கும் புதிய படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
ஜீவா
ஜீவா
Published on

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்த மாளவிகா கர்ப்பமானதும் சினிமாவை விட்டு விலகினார். தற்போது 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜீவா, சிவா நடிக்கும் கோல்மால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மாளவிகா

மீண்டும் நடிப்பது குறித்து மாளவிகா கூறும்போது, ‘‘நான் கடைசியாக விஜய்யின் குருவி படத்தில் நடித்தேன். முதல் குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் தாயானேன். அதனால் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தினேன். மீண்டும் நடிப்பதாக இருந்தால் நல்ல கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அப்போதுதான் கோல்மால் பட வாய்ப்பு கிடைத்தது. இதில் ஜீவாவின் பாஸாக நடிக்கிறேன். நல்ல கதாபாத்திரம். 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com