கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் பிரசாந்த் ரூ.10 லட்சம் நிதியுதவி

கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
பிரசாந்த், தியாகராஜன், மு.க.ஸ்டாலின்
பிரசாந்த், தியாகராஜன், மு.க.ஸ்டாலின்
Published on

கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

அந்த வகையில், நடிகர் பிரசாந்தும், அவரது தந்தை தியாகராஜனும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளனர். அவர்கள் இருவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தனர்.

பிரசாந்த், தியாகராஜன்

நடிகர் பிரசாந்த் தற்போது அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். இது பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com