விகாசை கரம் பிடித்தது எனக்கு கடவுள் கொடுத்த வரம் - நடிகை சுவாதி பேட்டி

நடிகை சுவாதிக்கும், அவரது காதலரான விமானி விகாசுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் விகாசை கரம் பிடித்தது எனக்கு கடவுள் கொடுத்த வரம் என்று சுவாதி கூறியுள்ளார். #SwathiReddy #SwathiMarriage
விகாசை கரம் பிடித்தது எனக்கு கடவுள் கொடுத்த வரம் - நடிகை சுவாதி பேட்டி
Published on

சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை சுவாதிக்கு, அவரது காதலரான விமானிக்கும் திருமணம் நடந்து முடிந்தது. கடந்த 30-ந்தேதி ஐதராபாத்தில் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொச்சியில் நேற்று நடந்தது. இதில் சுவாதியுடன் பணிபுரிந்த முக்கிய கலைஞர்கள் மற்றும் சினிமா துறையினர் கலந்துகொண்டனர்.

இதுபற்றி சுவாதி கூறுகையில் ‘15 நாட்களுக்கு முன்புதான் திருமண அழைப் பிதழ் தர தொடங்கினேன். மீடியாவை அழைத்து பகிரங்கமாக சொல்லலாம் என்று காத்திருந்தேன். ஆனால் அதற்குள் வி‌ஷயம் வெளியில் கசிந்துவிட்டது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். விகாசை கரம் பிடித்தது எனக்கு கடவுள் கொடுத்த வரம்’ என்றார். #SwathiReddy #SwathiMarriage

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com