

இப்படம் வெளியாகும் முன்பே அடுத்த படத்தின் படப்பிடிப்பை 60 சதவிகிதம் முடித்து விட்டார் சுசீந்திரன். இந்த புதிய படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ளனர். மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். கல்லூரி மாணவர்களை சுற்றி நடக்கும் கதையாக இந்தப் படம் அமைந்துள்ளது.
இதையடுத்து படத்தின் தலைப்பை இன்று தனது பெற்றோரை வைத்து வெளியிட போவதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்தார். அதன்படி படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை தனது தாய், தந்தையை வைத்து வெளியிட்டு இருக்கிறார்.