சூறக்காத்து

நந்தகுமார் இயக்கத்தில் பேயை கண்டுபிடிக்க போனவன் பேயான மாறும் கதையாக உருகாகி இருக்கும் ‘சூறக்காத்து’ படத்தின் முன்னோட்டம்.
சூறக்காத்து
Published on

இந்த படத்தை எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருப்பவர் நந்தகுமார். லீமா பாபு நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ள இயக்குனர் சரவண சக்தி வில்லன் வேடத்திலும் நடித்திருக்கிறார். டி.வி. பிரபலங்கள் பலர் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - கேசவன், இசை - பரிமளவாசன், பாடல்கள் - முத்து விஜயன், திருநாவுக்கரசு, படத்தொகுப்பு - யோகி,நடனம் - சீனுப்பிரியா, தினேஷ், ஸ்டண்ட் - அசோக்ராஜ்.

படம் பற்றி கூறிய இயக்குனர் நந்தகுமார், “இது வித்தியாசமான கதை களம் கொண்டது. கதை நிகழும் அந்த ஊரில் தொடர்ந்து பல கொலைகள் நடக்கின்றன. அதைக் கண்டு அஞ்சி நடுங்கும் ஊர் மக்கள் அவை பேயால் நடைபெறுவதாக நம்புகிறார்கள். பேயெல்லாம் பொய், நான் இதை நிரூபிக்கிறேன் என்று அந்த ஊருக்குச் செல்கிற நாயகன், ஒரு கட்டத்தில் பேயாக மாறுகிறான். அது எப்படி நடந்தது? முடிவு என்ன? என்பதே ‘சூறக்காத்து’ படம்.

பேய்களைவிட சமூக விரோதிகள் மோசமானவர்கள் என்கிற கருத்தும் படத்தில் உணர்த்தப்பட்டுள்ளது” என்றார். இந்த படம் நாளை வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com