நடிக்க வந்த போது என்னை கிண்டல் செய்தார்கள்: எஸ்.ஜே.சூர்யா

நடிக்க வந்தபோது தன்னை எல்லோரும் கிண்டல் செய்ததாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
நடிக்க வந்த போது என்னை கிண்டல் செய்தார்கள்: எஸ்.ஜே.சூர்யா
Published on

ஒரு காலத்தில் நான் நடிக்க வந்த போது, இவன் ஏன்டா நடிக்க வர்றான். டைரக்ட் பண்ணலாமே என்று என் காது படவே சொல்லி வலியை ஏற்படுத்தினார்கள். ஆனால் அதை எல்லாம் மீறி, எஸ்.ஜே.சூர்யாவால் நடிக்க முடியும் என்று நம்பி என்னை ‘இறைவி’ படத்தில் நடிக்க வைத்தவர் கார்த்திக் சுப்புராஜ். என் நடிப்பு திறமையை உலகத்துக்கே காட்டியவர் அவர். அவருடைய பட நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் பட நிறுவன தொடக்க விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி.

கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள மேயாதமான் படத்தின் கதையை என்னிடம் சொன்னார். அதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். இது தவிர பிரபுதேவாவை வைத்து ‘மெர்க்குரி’ படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த இரண்டு படங்களும் வித்தியாசமானவை. கண்டிப்பாக சாதனைபடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com