எனக்கு இன்னும் தகுதி வரவில்லை - சித்தார்த்

சசி இயக்கத்தில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் நடித்திருக்கும் சித்தார்த், எனக்கு இன்னும் தகுதி வரவில்லை என்று பேட்டியளித்துள்ளார்.
சித்தார்த்
சித்தார்த்
Published on

சித்தார்த், ஜிவி.பிரகாஷ், லிஜோமோல் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையொட்டி சித்தார்த் அளித்த பேட்டி:- 

நெகிழ்வான படத்தில் நடித்த அனுபவம்?

நான் நடித்த படங்களிலேயே ரொம்ப திருப்தியான படம். இயக்குனர் சசி அதற்கான சுதந்திரத்தை கொடுத்தார். கமிஷனர் அலுவலகத்தில் பேசும் காட்சி, நைட்டி பற்றிய வசனம் போன்ற முக்கிய காட்சிகளுக்கு நிறைய ஆராய்ச்சி செய்தோம். அந்த அபார உழைப்புக்கு தான் ரசிகர்கள் கைதட்டி மகிழ்கிறார்கள். இயல்பான போலீசை காட்ட திட்டமிட்டோம். அது நடந்து இருக்கிறது.

ஜிவி.பிரகாசுக்கு நைட்டி அணிவிக்கும் காட்சி?

அதில் நடிக்க ரொம்பவே தயங்கினேன். ஆனால் அது தவறு என்று என் அம்மாவாக நடித்த தீபா உணர்த்தும் காட்சி படத்துக்கு மிகவும் முக்கியமான காட்சி. சினிமாவை பார்த்து யாரும் திருந்தவேண்டும் என்று நினைக்கவில்லை. சில விஷயங்களை உணர்த்தினாலே போதும். மக்களின் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தினாலே போதும்.

இன்னொரு கதாநாயகனுடன் நடிப்பது பற்றி?

இந்த படத்தை பொறுத்தவரை கதை தான் முதன்மை. அடுத்து லிஜோமோல் என்ற நடிகை. இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நடிகனே கிடையாது. கதை கேட்கும்போதே தெரிந்துதான் சம்மதித்தேன். படம் நன்றாக வந்தால் போதும்.

சாக்லேட் பாய் என்ற பட்டம் குறித்து?

இனிமேலும் என்னை சாக்லேட் பாய் என்று அழைத்தால் கடும் கோபம் வரும். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட தான் நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் என்னை ஒரு வட்டத்துக்குள் சிக்க வைக்காதீர்கள்.

டைரக்‌ஷன் எப்போது?

எனக்குள் ஒரு உதவி இயக்குனர் இருக்கிறான். கதையில் ஏற்படும் சந்தேகங்களை கேட்பேன். எனக்கு இன்னும் இயக்குனர் ஆவதற்கான தகுதி வரவில்லை.

ட்விட்டரில் சமூக கருத்துகளை சொல்வது அரசியலுக்கு வருவதற்காகவா?

அரசியலுக்கு வந்தால் இப்படி வெளிப்படையாக கருத்து சொல்ல முடியாது. எந்த வட்டத்துக்குள்ளும் சிக்கி கொள்ளாமல் இருந்தால் தான் சுதந்திரமாக கருத்து சொல்லமுடியும். அரசியலுக்கு வரமாட்டேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com