ஹீரோக்கள் எங்கே போனார்கள்? - ஷ்ரத்தா ஸ்ரீநாத்

விக்ரம் வேதா, ரிச்சி, இவன் தந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், மீடூ விவகாரத்தில் ஹீரோக்கள் எங்கே போனார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். #MeToo #ShraddhaSrinath
ஹீரோக்கள் எங்கே போனார்கள்? - ஷ்ரத்தா ஸ்ரீநாத்
Published on

நிபுணன் திரைப்பட படப்பிடிப்பில் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை சுருதி ஹரிகரன் மீடூ இயக்கத்தில் தன் அனுபவத்தை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து கன்னடத்தில் யூடர்ன், தமிழில் விக்ரம் வேதா, ரிச்சி, இவன் தந்திரன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் சுருதிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். “உனக்கு நேர்ந்ததை நினைத்து நான் வருந்துகிறேன். பணியிடத்தில் யாருமே அசவுகரியமாக உணரக்கூடாது.

அதேபோல் அடுத்தவர்களை இம்சிக்கும் இடத்திலும் யாருமே இருக்ககூடாது. ஒரு பெண் ஒரு நட்சத்திர நடிகருடன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை வெளியே பகிர்ந்து கொள்கிறார். இணைய உலகமே அவரை வாட்டி எடுக்கிறது.

போதாதற்கு கொலை மிரட்டல்களும், விளம்பரத்துக்கான புகார் என்ற வசவுகளும் சேர்ந்து கொள்கின்றன. திரையில் எனது தங்கையை காப்பேன், எனது தாயை பேணுவேன் என்றெல்லாம் சூளுரைத்து வில்லன்களை அடித்து துவைத்து, லாரியைக்கூட பறக்கவிட்டவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்.

நமது சூப்பர் ஹீரோக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இப்போது நான் தெரிந்து கொள்ள நினைக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com