கபடி வீராங்கனைகள் வேலை வாய்ப்பு, வாழ்க்கைக்காக போராடுகிறார்கள் - சசிகுமார்

கென்னடி கிளப் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சசிகுமார், கபடி வீராங்கனைகள் வேலை வாய்ப்பு வாழ்க்கைக்காக போராடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
நடிகர் சசிகுமார்
நடிகர் சசிகுமார்
Published on

சுசீந்தரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார் நடித்துள்ள படம் கென்னடி கிளப். மகளிர் கபடியை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் ‘கென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சசிகுமார் பேசிய தாவது:-

‘கென்னடி கிளப்’ படத்தின் நாயகன் நான் இல்லை. இப்படத்தில் நடித்திருக்கும் நிஜ கபடி வீராங்கனைகள் தான். கபடி பயிற்சியாளர் செல்வமாக தான் நான் நடித்திருக்கிறேன். நல்லுச் சாமியாக பாரதிராஜா நடித்திருக்கிறார்.

கபடியில் வென்றால் தான் வேலைவாய்ப்பு, வாழ்க்கை எல்லாமே அமையும் என்று தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல போட்டிகளில் வென்றிருக்கிறார்கள்.

இப்படத்தின் கதையை சுசீந்திரன் கூறும்போது பெண்களுக்காக இப்படத்தை நிச்சயம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இம்மாதிரி படங்களில் நான் நிறைய நடிப்பேன். பாரதிராஜாவுடன் நடிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கும். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.

அவரை சுசீந்திரன் அழகாக கையாண்டார். எல்லோருடனும் இணைந்து நடித்தது இயல்பாக, சுலபமான அனுபவமாக இருந்தது. டி.இமானின் இசை இப்படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும். இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க முடிவு செய்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com