12 வருடங்களுக்கு பிறகு இணைந்த சரத்குமார்-நெப்போலியன்

12 வருடங்களுக்கு பிறகு சரத்குமாரும், நெப்போலியனும் ‘சென்னையில் ஒருநாள்-2’ படத்தில் இணைந்துள்ளார்கள்.
12 வருடங்களுக்கு பிறகு இணைந்த சரத்குமார்-நெப்போலியன்
Published on

இப்படத்தில் சரத்குமார் ரகசிய உளவாளியாக நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் கோவையில் தொடங்கி நடந்து முடிந்துள்ளது. தற்போது இப்படத்தில் நடிகர் நெப்போலியனும், நடிகை சுஹாசினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான ‘தென்காசிபட்டணம்’ படத்தில் சரத்குமாரும், நெப்போலியனும் இணைந்து நடித்திருந்தார்கள். அதன்பிறகு 2005-ல் வெளிவந்த ’ஐயா’ படத்திலும் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். அதேபோல், சரத்குமாரும், சுஹாசினியும் முதன்முறையாக இப்படத்தில்தான் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெபிஆர் இயக்குகிறார். ராண் என்பவர் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com