கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி.... மீண்டும் தள்ளிப்போகும் ஜேம்ஸ் பாண்ட் படம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 25-வது ஜேம்ஸ் பாண்ட் படமான ‘நோ டைம் டூ டை’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நோ டைம் டூ டை பட போஸ்டர்
நோ டைம் டூ டை பட போஸ்டர்
Published on

ஹாலிவுட்டில் 1960களில் தொடங்கிய ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. தற்போது 25-வது ஜேம்ஸ் பாண்ட் படமாக ‘நோ டைம் டூ டை’ தயாராகிறது. இதில் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் டேனியல் கிரெய்க் நடிக்கிறார். இதுவரை 4 தடவை இந்த வேடத்தை ஏற்றுள்ள அவருக்கு இது ஐந்தாவது படம். இது தனது கடைசி படம் என்றும், இனிமேல் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க மாட்டேன் என்றும் டேனியல் கிரெய்க் அறிவித்து உள்ளார். எனவே இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

படத்தை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனா பரவலால் லண்டனில் நவம்பர் 12-ந்தேதியும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் நவம்பர் 25-ந்தேதியும் வெளியாகும் என்று தள்ளி வைத்தனர். ஆனால் கொரோனா பரவல் நீடிப்பதாலும் பல நாடுகளில் தியேட்டர்களை திறக்காததாலும் நோ டைம் டூ டை படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி ரிலீசாகும் என்று தற்போது அறிவித்து உள்ளனர். இது ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com