

நிகழ்ச்சியில் நடிகர் தாமு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மன அழுத்தமின்றி பணிபுரியவேண்டும். அதற்கு அவர்கள் மாணவர்களுடன் இன்முகத்துடன் பழகவேண்டும். மன அழுத்தத்தை போக்க சிரித்து பேசவேண்டும். அடிக்கடி கைத்தட்டவேண்டும். ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும்விதம் முக்கியமானது.
புத்தாக்க பயிற்சி முகாமில் நடிகர் தாமு பேசியபோது எடுத்த படம்.
மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து ஆர்வத்துடன் பாடத்தை கவனிக்கும் வகையில் கற்பிக்கவேண்டும். தலைமை ஆசிரியர்கள் தாங்கள் கடந்துவந்த பாதையை நினைத்து பார்க்கவேண்டும். அப்போதுதான் மற்ற ஆசிரியர்களின் நிலையை புரிந்துகொள்ள முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.