கேரள முதல்வரை சந்தித்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் நடிகர் லாரன்ஸ்

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதியுதவியை கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார். #KeralaFloods #KeralaFloodRelief #RaghavaLawrence
கேரள முதல்வரை சந்தித்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் நடிகர் லாரன்ஸ்
Published on

தொடர் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி மதிப்புள்ள செக்கை கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று நேரில் வழங்கினார்.

நடிகர் விஜய் ரூ.70 லட்சமும், நடிகர் விக்ரம் ரூ.35 லட்சமும், விஜய் சேதுபதி ரூ.30 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளனர். 

நடிகர்கள் கமல், ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #RaghavaLawrence

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com