மலை ஏற முடியாமல் வருத்தத்தில் இருக்கும் ராய் லட்சுமி

தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி மலையேற முடியாமல் வருத்தத்தில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
நடிகை ராய் லட்சுமி
நடிகை ராய் லட்சுமி
Published on

மலை ஏறும் டிராக் முறை நடிகைகள் பலருக்கு சிறந்த பொழுதுபோக்கு. ராய் லட்சுமியும் அதில் ஒருவர். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் அடிக்கடி மலை ஏற சென்றுவிடுவார்.

 கடந்த மார்ச் மாதத்தில் இது போல் கேரள மலைகளுக்கு செல்ல ராய் லட்சுமி முடிவு செய்திருந்தார். அதற்குள் கொரோனா பீதி அதிகரிக்க தொடங்கிவிட்டது. பிறகு ஊரடங்கும் தொடங்கிவிட்டதால் டிராக் செல்ல முடியவில்லை என்று ராய் லட்சுமி வருத்தத்தில் இருக்கிறார்.

‘மலை ஏறுவது எனது சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்று. இது எனக்கு திரில் அனுபவத்தை தரும். 6 மாதங்களுக்கு ஒரு முறை டிராக் சென்றுவிடுவேன். இந்த தடவை ஊரடங்கு காரணமாக நான் எங்கும் செல்ல முடியவில்லை. இது எனக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது என்கிறார் ராய் லட்சுமி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com