

இதற்கிடையில் விஜய் சேதுபதி தன்னுடன் படித்த நண்பர்களில் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி இருக்கிறார். ஒருவர் பெண் கூட தவறாக தொடர்பு இருந்து வருகிறார். ஆனால், விஜய்சேதுபதி நேர்மையாக ஒழுக்கத்துடன் இருந்து வருகிறார்.
விஜய்சேதுபதியும், காயத்ரியும் காதலித்து வரும் நிலையில், தன்னை யாரோ பின் தொடர்ந்து வருவதாக விஜய் சேதுபதியிடம் கூறுகிறார் காயத்ரி. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சமாதானம் படுத்துகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில், காயத்ரியின் ஆபாச போட்டோ ஒன்று விஜய் சேதுபதியின் போனுக்கு வருகிறது. அந்த நம்பர் யாருடையது என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். மற்றொருநாள் ஷாப்பிங் மாலில் காயத்ரி உடை மாற்றும் வீடியோ ஒன்று விஜய் சேதுபதிக்கு வருகிறது. அடுத்து காயத்ரி குளிக்கும் வீடியோ ஒன்றும் வருகிறது.
என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் விஜய் சேதுபதிக்கு ஒரு போன் வருகிறது. இதுபோன்ற வீடியோக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால், ஒரு வேலையை செய்ய சொல்லி கட்டளை வருகிறது. இறுதியில் அந்த கட்டளையை விஜய் சேதுபதி ஏற்றாரா? இந்த துன்புறுத்தலுக்கு பின் யார் இருக்கிறார்? என்பதே மீதிக்கதை.
படத்தில் கல்லூரி முடித்து விட்டு இசைக் கலைஞராக வேண்டும் என்று ஆர்வதுடன் இருக்கும் இளைஞராக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. முந்தைய படங்களை விட இதில் ரொமன்ஸ் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஒவ்வொரு முறை வீடியோ வரும்போதும், அந்தப் பதற்றத்தை அப்படியே ரியலாகவே காண்பித்திருக்கிறார்.
காயத்ரியை சுற்றியே படம் நகர்கிறது. நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்ததை உணர்ந்து, அதை சிறப்பாகவே பயன்படுத்தி இருக்கிறார். ரொமன்ஸ் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று அதை திறம்பட செய்திருக்கிறார் மகிமா. திரையில் பார்க்காவும் அழகாக இருக்கிறார்.
ஆபாச படங்களை பார்ப்பதும், அதை மற்றவர்களுக்கு பகிர்வதும் தவறு என்றும், தனது குடும்பத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் வலி எப்படி இருக்குமோ, அப்படித்தான் பார்ப்பவர்களும், பகிர்பவர்களும் சிந்திக்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. இதில் காதல், திரில்லர் கலந்து கொடுத்திருக்கிறார். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை மற்றவர்களுக்குப் பகிர்ந்து இன்பமடையும் எல்லோருக்கும் சாட்டையைச் சுழற்றியிருக்கிறார்.
சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். திரில்லர் படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை சிறப்பாக கொடுத்திருக்கிறார் தினேஷ் கிருஷ்ணன்.