பிரியாமணியின் பாடிபில்டிங்... வைரலாகும் புகைப்படம்

பிரபல நடிகையாக இருக்கும் பிரியாமணியின் பாடிபில்டிங் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரியா மணி
பிரியா மணி
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பிரியாமணி. நடிகர் கார்த்தி நடித்த முதல் படமான ’பருத்தி வீரன்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. 

பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த கொரோனா விடுமுறையில் தனது வித்தியாசமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் பிரியாமணி தற்போது பாடிபில்டிங் குறித்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிரியாமணி தனது இரண்டு கைகளையும் பின்பக்கம் வைத்து கொள்ள, அவருடைய இரண்டு கைகளாக அவருடைய கணவரின் கைகள் உள்ளது போல் கேமிரா ட்ரிக்கில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை நடிகை பிரியாமணி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com