மான்ஸ்டர் படத்தில் நடிக்க தயங்கினேன் - பிரியா பவானி ஷங்கர்

மான்ஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை பிரியா பவானி ஷங்கர், இந்த படத்தில் நடிக்க முதலில் தயங்கினேன் என்று கூறியிருக்கிறார். #Monster #PriyaBhavaniShankar
மான்ஸ்டர் படத்தில் நடிக்க தயங்கினேன் - பிரியா பவானி ஷங்கர்
Published on

‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

விழாவில் பிரியா பவானி சங்கர் பேசும்போது,

இந்த படத்தில் கிடைத்த அனுபவம், எஸ்.ஜே.சூர்யா நாயகன் என்றதும் அவருடன் எனக்கு பொருத்தமாக இருக்குமா? என்று தயங்கினேன். ஆனால் இயக்குநர் முதலில் கதை கேட்டு முடிவு செய்யுங்கள் என்று கூறினார். சங்கர் கூறியதுபோல் என்னை பாதுகாப்பாக வைத்திருந்தார். படக்குழுவினருடன் ஜாலியாக பணியாற்றினேன். ஜஸ்டினின் இசையில் எனக்கு ஒரு பாடல் அமைந்ததில் மகிழ்ச்சி என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com