அதற்குள் காக்குமா இந்தியா அந்த வீரத் திருமகனை? - பார்த்திபன் ட்விட்

பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை இந்தியாவுக்கு அனுப்ப கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஈரப்படுத்தாமல் சேதப்படுத்தாமல் காக்குமா வீரத் திருமகனை என்று பார்த்திபன் ட்விட்டரில் கோரியுள்ளார்.
அதற்குள் காக்குமா இந்தியா அந்த வீரத் திருமகனை? - பார்த்திபன் ட்விட்
Published on

பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய போர் விமானத்தை நேற்று சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் ராணுவம். கைதான சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை ‘விங் கமாண்டர்’ அபினந்தன் வர்தமானை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்துடன் அபிநந்தன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைராக பரவியது. அபிநந்தனை விரைவில் மீட்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

கணவனின் கடமையும்

தந்தையின் வீரமும்,

மனைவியின் மனதையும்

மகனின் கண்களையும்,

ஈரப்படுத்தாமல் 

சேதப்படுத்தாமல்

எத்தனை நிமிடங்கள்

காக்கும்?

அதற்குள் காக்குமா

இந்தியா அந்த வீரத்

திருமகனை?

இவ்வாறு கூறியிருக்கிறார். #Abhinandan #BringBackAbhinandan #Parthiban

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com