

ஊர் திரும்பிய காதலர் ஹேமாவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். இறுதியில் ஹேமா, கணவரை விட்டு காதலனுடன் சென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜிப்ஸி குமார் இதற்கு முன் இயக்குனராக இருந்தவர். தற்போது இப்படத்தின் மூலம் நாயகனாக மாறி இருக்கிறார். தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். பச்சைக்கிளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹேமாவிற்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை.
கிராமத்து பின்னணியில் காதலா உறவா என்ற கோணத்தில் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ சாய் எம்.கே.செல்வம். ஆனால் திரைக்கதையில் தெளிவு இல்லாததால் திரைப்படம் பலவீனமாக அமைந்துள்ளது. கதாப்பாத்திரங்களிடையே வேலை வாங்க மறந்து இருக்கிறார்.
செல்வாநம்பி இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஏ.எஸ்.உதயசங்கரின் ஒளிப்பதிவு அதிகம் எடுபடவில்லை.
மொத்தத்தில் 'பச்சைக்கிளி' பழைய கிளி.