காரில் நம்பர் பிளேட் திடீர் மாயம்: பகத் பாசிலிடம் விசாரிக்க போக்குவரத்து அதிகாரிகள் முடிவு

பகத்பாசிலின் காரின் நம்பர் பிளேட் மாயமானது பற்றி போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.
காரில் நம்பர் பிளேட் திடீர் மாயம்: பகத் பாசிலிடம் விசாரிக்க போக்குவரத்து அதிகாரிகள் முடிவு
Published on

முதலில் நடிகை அமலா பால் மீது தான் இந்த குற்றச்சாட்டு கூறப்பட்டது. புதுச்சேரியில் காரை பதிவு செய்ததன் மூலம் அவர் ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேப்போல மலையாள நடிகரும், பாரதீய ஜனதா எம்.பி.யுமான சுரேஷ் கோபியும் புதுச்சேரியில் பதிவு செய்து சொகுசு காரை கேரளாவில் பயன்படுத்துவதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் எந்த விளக்கமும் அளிக்க வில்லை.

இந்த நிலையில் மலையாள இளம் நடிகரான பகத்பாசிலும் இதேப்போல கார் மோசடியில் அடுத்து சிக்கினார். இது போன்ற வெளி மாநிலத்தில் காரை பதிவு செய்து அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக கேரள போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com