திரிஷா வழியில் நடிகையாக அவதாரம் எடுத்துள்ள தீக்‌ஷிதாவின் புதிய நிபந்தனைகள்

திரிஷா வழியில் நடிகையாக அவதாரம் எடுத்துள்ள நடிக தீக்‌ஷிதா படங்களில் நடிக்க பல நிபந்தனைகளை போடுகின்றார்.
திரிஷா வழியில் நடிகையாக அவதாரம் எடுத்துள்ள தீக்‌ஷிதாவின் புதிய நிபந்தனைகள்
Published on

சென்னையை சேர்ந்த இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு மாடலிங் செய்தார். 2012-ல் மிஸ் சவுத் இந்தியா போட்டியில் இறுதி போட்டி வரை வந்தார். நாயகியாகிவிட்ட தீக்ஷிதாவின் விருப்பம் பற்றி கேட்டபோது...

“சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் நடிக்க வந்திருக்கிறேன். பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால், கடுமையான போராட்டத்துக்குப் பிறகே சினிமாவில் நடிக்க அனுமதி கொடுத்தார்கள்.

நான் குடும்பத்தோடு பார்க்கும் விதமான படங்களில் மட்டுமே நடிப்பேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். நல்ல கதை, நல்ல வேடம் அமைந்தால் மட்டுமே நடிப்பேன். நடிப்பில் மட்டுமல்ல, காஸ்டியூம், டிசைனிங், இயக்கம் ஆகியவற்றின் மீதும் எனக்கு ஆர்வம் இருக்கிறது” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com