

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார்.
2017ம் ஆண்டே படப்பிடிப்பு முடிக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தொடர்ந்து பலமுறை தள்ளிப்போனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், இப்படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அரவிந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.