அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, ஐரா படத்தின் அதிகாலை 5 மணி காட்சி மூலம் தனது ரசிகர்களை காண வருகிறார். #Nayanthara #Airaa
அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா
Published on

சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படம் வருகிற 28-ந்தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு சென்னையில் காலை 5 மணி காட்சி போடப்படும் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை ஜே.ஜே.ஆர் புரொடக்‌‌ஷன்ஸ் தயாரித்திருக்கிறது.

சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், சர்ஜுன். இவரது இரண்டாவது படம்தான் ‘ஐரா’. நயன்தாரா, இதில் பவானி மற்றும் யமுனா என்னும் கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

மேலும், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கலையரசன் நடிக்கிறார். 29ந்தேதி விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் வெளியாகிறது. அதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமை, ‘ஐரா’ படம் வெளியாகிறது. சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி கே.எஸ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

பெரிய ஹீரோக்களின் படங்களைத் தான் அதிகாலை 5 மணிக்கு திரையிடுவார்கள். சிறிய பட்ஜெட் படங்களுக்கும், சிறிய நடிகர்கள் படங்களுக்கு அதிகாலை 5 மணி காட்சி திரையிடுவதில்லை. ஆனால், சமீபத்தில் வெளியான ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘எல்.கே.ஜி’ படம் காலை 5 மணி காட்சி திரையிடப்பட்டது. இதற்காக விஷ்ணு விஷாலும், ஆர்.ஜே.பாலாஜியும் டுவிட்டரில் காரசாரமாக மோதிக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, ‘ஐரா’ படமும் காலை 5 மணிக்கு திரையிடப்பட இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com