‘2020’ மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது - பேட்ட பட வில்லன் சொல்கிறார்

2020-ம் ஆண்டு தனக்கு சிறபான ஆண்டாக அமைந்ததாக ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.
நவாசுதீன் சித்திக்
நவாசுதீன் சித்திக்
Published on

ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். இந்தி திரை உலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இந்தியாவின் புகழ் பெற்ற நடிகராக இருக்கிறார். மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடித்தும் பிரபலமானார். தேசிய விருதுகளும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்த ஆண்டு தனக்கு சிறப்பாக அமைந்ததாக அவர் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “ஒரு சாதாரண மனிதனாக இந்த ஆண்டு மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கும் அப்படியே சென்றது. ஆனால் ஒரு நடிகனாக பார்த்தால், இந்தாண்டு எனக்குச் சிறப்பாக அமைந்தது. 

நான் நடித்த ‘ராத் அகேலி ஹை’ மற்றும் ‘சீரியஸ் மென்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகின. இப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், இந்த ஆண்டு எனக்கு சிறப்பாக அமைந்தது” என நவாசுதீன் சித்திக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com