

பாலா இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு உருவாகி இருக்கும் ‘நாச்சியார்’ படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் அவருக்கு ஜோடியாக நடித்த இவானாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருக்கின்றன. குறிப்பாக இதில் ‘அரசி’ என்ற பாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருக்கும் இவானா ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.
இதையடுத்து திரை உலகின் பார்வை இவானா பக்கம் திரும்பி இருக்கிறது. அருவி படத்தில் நடித்து பெயர் வாங்கிய அதிதி பாலன் போல, இவானாவுக்கும் தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.