திரில்லர் கதையில் இணையும் மிஷ்கின் - ஆர்.கே.சுரேஷ்

டூலெட் படத்தை இயக்கிய செழியன் அடுத்ததாக இயக்கவிருக்கும் திரில்லர் கதையில் ஆர்.கே.சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.
திரில்லர் கதையில் இணையும் மிஷ்கின் - ஆர்.கே.சுரேஷ்
Published on

ஒளிப்பதிவாளர் செழியன் டூலெட் படத்தின் மூலம் தன்னை ஒரு இயக்குநராக தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுக்களை பெற்ற இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களே கிடைத்தது.

இந்த நிலையில், தனது அடுத்த படத்திற்கான வேலையில் செழியன் தற்போது ஈடுபட்டுள்ளார். த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இருவருமே இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றனர்.

கொலை பின்னணியில் இருக்கும் மர்மத்தை மையப்படுத்திய கதையாக இந்த படம் உருவாகுவதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் துவங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com