நடிகராக களமிறங்கிய பாடலாசிரியர் முருகன் மந்திரம்

விருந்தாளி, சாரல், சும்மாவே ஆடுவோம், திருப்பதி லட்டு, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதிய முருகன் மந்திரம், தற்போது நடிகராக களமிறங்கி இருக்கிறார். #MuruganManthiram
நடிகராக களமிறங்கிய பாடலாசிரியர் முருகன் மந்திரம்
Published on

சினிமாவில் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலர் நடிகர்களாக களமிறங்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார்கள். அந்த வரிசையில் தற்போது பாடலாசிரியர் முருகன் மந்திரம் நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

பாடலாசிரியர் முருகன் மந்திரம் ‘விருந்தாளி, சாரல், சும்மாவே ஆடுவோம், திருப்பதி லட்டு, பட்டினப்பாக்கம், உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இவர் தற்போது ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘ஒங்கள போடணும் சார்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பாடல்கள், வசனத்தையும் முருகன் மந்திரம் எழுதியுள்ளார்.

இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் இயக்கும் இப்படத்தில், 5 கதாநாயகிகள் நடித்து வருகிறார்கள். கமர்சியல் என்டர்டெயினராக இப்படம் உருவாகி வருகிறது. ஸிக்மா பிலிம்ஸ் சார்பாக மனோஜ் தயாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com